உள்ளூர் செய்திகள் (District)

இரணியல் அருகே மூதாட்டியை தாக்கிய 2 பெண்கள் மீது வழக்கு

Published On 2022-08-07 08:12 GMT   |   Update On 2022-08-07 08:12 GMT
  • மூதாட்டி தக்கலை தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
  • இரணியல் போலீசில் புகார்

கன்னியாகுமரி:

இரணியல் அருகே நெல்லியார்கோணம் தைபிலாவிளையை சேர்ந்தவர் சேவியர். இவரது மனைவி இருதயமேரி (வயது 77). இவருக்கு 2 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.

மகன்கள் இருவரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் மூதாட்டி இருதயமேரி தனியாக வசித்து வருகிறார். சம்பவத்தன்று மாலை இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த சுசீலாமேரி, செல்வமேரி ஆகிய 2 பேரும் மூதாட்டி வீட்டுக்குச் சென்று அவரை அவதூறாக பேசி கையில் வைத்திருந்த தென்னை ஓலை மற்றும் மட்டையால் மூதாட்டியை தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் வலது கையில் ரத்தக் காயமடைந்த மூதாட்டி தக்கலை தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து இருதயமேரி இரணியல் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 2 பெண்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News