உள்ளூர் செய்திகள்

இரணியல் அருகே கல்லூரி மாணவி மாயம்

Published On 2022-09-12 08:07 GMT   |   Update On 2022-09-12 08:07 GMT
  • வீட்டில் இருந்தவர் திடீரென காணவில்லை.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

கன்னியாகுமரி:

இரணியல் அருகே திருவிதாங்கோடு அடுத்த அந்தோணியார் வட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜோசப்ராஜ். இவரது மகள் ஜெனிஷா (வயது 19). களியங்காடு பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்த ஜெனிஷாவை திடீரென காணவில்லை. உறவினர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் அவரது தாயார் மரியபுஷ்பம் (44). இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News