குலசேகரம் அருகே காங்கிரசார் பாதயாத்திரை
- திற்பரப்பில் இருந்து சித்திரங்கோடு வரை நடைபெற்றது
- மத்திய பா.ஜ.க. ஆட்சியின் மக்கள் விரோத போக்கு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து நடைபெற்றது
கன்னியாகுமரி:
மத்திய பா.ஜ.க. ஆட்சியின் மக்கள் விரோத போக்கு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவட்டார் மேற்கு வட்டார காங்கிரஸ் சார்பில் பாதயாத்திரை நடைபெற்றது. திற்பரப்பில் இருந்து சித்திரங்கோடு வரை நடைபெற்ற இந்த யாத்திரைக்கு மாவட்ட காங். தலைவர் பினுலால்சிங் தலைமை தாங்கினார்
வட்டார தலைவர்கள் காஸ்டன்கிளிட்டஸ், ஜெகன் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் வக்கீல் ஜான் இக்னேஷியஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரெத்தினகுமார், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் செலின்மேரி, மாவட்ட துணைதலைவர் ராஜ ரெத்தினம், மாவட்ட பொது செயலாளர் மோகன் தாஸ், திற்பரப்பு பேருராட்சி தலைவர் பொன்.ரவி.
திற்பரப்பு நகர தலைவர் எட்வின், மாநில இளைஞர் காங். பொது செயலாளர் பினிஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பாத யாத்திரை திற்பரப்பில் தொடங்கி அரசமூடு, மாமூடு, பொன்மனை, குல சேகரம், திருவட்டார், வியனூர், வேர்கிளம்பி வழியாக சித்தரங்கோட்டில் நிறைவடைகிறது.