உள்ளூர் செய்திகள் (District)
குமரி பஸ் நிறுத்தத்தில் முதியவர் சுருண்டு விழுந்து திடீர் சாவு
- நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்
- கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி போலீஸ் நிலையம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் இன்று காலை 10 மணிக்கு சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியோர் ஒருவர் பஸ்சில்இருந்து கீழே இறங்கினார். அப்போது அவர் "திடீர்"என்று மயங்கி விழுந்தார்.
உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் அவர் நெல்லை மாவட்டம் பழவூரைச்சேர்ந்த நடராஜன் (வயது60) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து போலீ சார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.