உள்ளூர் செய்திகள்

மார்த்தாண்டம் அருகே லாரி மோதி முதியவர் பலி

Published On 2022-07-29 07:00 GMT   |   Update On 2022-07-29 07:00 GMT
  • மார்த்தாண்டம் போலீசார் உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்
  • மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்டம் கல்லன்குழி பயற்றன் கால விளையை சேர்ந்தவர் ஆரோன்மணி (வயது 60) இவர் மகளை குழித்துறை தெற்றி விளையில் திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

சம்பவத்தன்று தனது மகளின் வீட்டிற்கு சென்றுவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் மார்த்தாண்டம் வழி யாக சிராயன்குழி பகு தியில் சென்று கொண்டி ருந்தபோது, வேகமாக வந்த லாரி மோதியது. இதில் ஆரோன்மணியின் மீது லாரியின் பின் சக்கரம் ஏறியதில் பரிதாபமாக பலியானார்.

அவரது உடலை கைப்பற்றிய மார்த்தாண்டம் போலீசார் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் லாரி ஓட்டி வந்த ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்த உதயமார்த்தாண்டன் (வயது 55) என தெரிய வந்தது. இவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News