உள்ளூர் செய்திகள்
இரணியல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் மூதாட்டி பலி
- திருவனந்தபுரம் அனந்தபுரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
- இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
இரணியலை அடுத்த இரணியல்கோணம் கீழ மணியன்குழியை சேர்ந்தவர் ஸ்ரீகுமார். இவரது மனைவி ஷர்மிளா (வயது 55).
இவர், சம்பவத்தன்று இரவு தனது சகோதரர் ராஜகேசவதாசுடன்ரோட்டில் நடந்து சென்றபோது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் பலத்த காயம் அடைந்த ஷர்மிளா திருவனந்தபுரம் அனந்தபுரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக இறந் தார்.
இது குறித்து அவரது சகோதரர் ராஜகேசவதாஸ் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஷர்மிளா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற மோட்டார் சைக்கிளை தேடி வருகின்றனர்.