உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் உடற்பயிற்சி நிலைய உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2022-07-04 07:33 GMT   |   Update On 2022-07-04 07:33 GMT
  • நாகர்கோவில் வடசேரி புது குடியிருப்பு கவிமணி தெருவை சேர்ந்தவர்.
  • வடசேரி பகுதியில் உடற்பயிற்சி கூடம் வைத்துள்ளார்.

நாகர்கோவில்:

நாகர்கோவில் வடசேரி புது குடியிருப்பு கவிமணி தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 42).

இவர் வடசேரி பகுதியில் உடற்பயிற்சி கூடம் வைத்துள்ளார்.இங்கு ஏராளமான வாலிபர்கள் காலை மாலை நேரங்களில் உடற்பயிற்சி செய்து வருகிறார்கள். ஜெயக்குமார் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.இதையடுத்து அவரது மனைவி தங்க பாய் அவரை சமாதானம் செய்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலையில் வீட்டிலிருந்து உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வதாக கூறிவிட்டு ஜெயக்குமார் சென்றார். உடற்பயிற்சி கூடத்தில் இருந்த ஜெயக்குமார் மாலையில் வாந்தி எடுத்துள்ளார்.இதையடுத்து அவரது சகோதரர் ஜெயக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். ஜெயக்குமாரை பரிசோதித்த டாக்டர்கள் விஷம் குடித்திருப்பதாக தெரிவித்தனர்.

இது பற்றிய தகவல் அறிந்ததும் ஜெயக்குமாரின் மனைவி தங்கபாய் மற்றும் குழந்தைகளும் அங்கு வந்து பார்த்தனர். சிகிச்சையில் இருந்த ஜெயக்குமார் இரவு சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தங்கபாய் வடசேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் திருமுருகன் சப்-இன்ஸ்பெக்டர் சத்திய சோபன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஜெயக்குமாரின் உடல் பிரேத பரிசோதனை ஆசா ரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடப்பதை யடுத்து அவரது உறவினர்கள் மற்றும் உடற்பயிற்சி கூடத்திற்கு வந்து செல்பவர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர். உடற்பயிற்சிகூட உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News