உள்ளூர் செய்திகள்

குளச்சல் அருகே களிமார் விஷ்ணு கோவிலில் உண்டியல் உடைத்து திருட்டு

Published On 2022-07-29 08:05 GMT   |   Update On 2022-07-29 08:05 GMT
  • திருடப்பட்ட காணிக்கை பணம் எவ்வளவு என்று மதிப்பிடப்படவில்லை.
  • போலீசார் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்

கன்னியாகுமரி:

குளச்சல் மெயின்ரோட்டில் களிமார் ஸ்ரீ மகாவிஷ்ணு கோவில் உள்ளது.

இந்த கோவிலில் நேற்றிரவு வழக்கம்போல் வழிபாடு முடிந்து நிர்வாகிகள் கோவில் கிரில் வாசலை பூட்டிவிட்டு சென்றனர். இன்று அதிகாலை அந்த வழியாக சென்ற ஒருவர் கோவில் வாசல் கிரில் திறந்து கிடந்ததை கண்டு நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார்.உடனே நிர்வாகிகள் கோவிலுக்குள் சென்று பார்க்கும்போது கோவில் உள்பக்கமாக இருந்த உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

அதிலிருந்த காணிக்கை பணம் காணாமல் போயிருந்தது. மர்ம நபர்கள் கிரில் பூட்டையும், உண்டியல் பூட்டையும் உடைத்து காணிக்கை பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது. திருடப்பட்ட காணிக்கை பணம் எவ்வளவு என்று மதிப்பிடப்படவில்லை. காணிக்கை பணத்தை திருடிய நபர்கள் 2 பூட்டுகளையும் எடுத்து சென்று விட்டனர்.

இது குறித்து கோவில் நிர்வாக தலைவர் ஜெகன்னாதன் குளச்சல் போலீசில் புகார் செய்தார்.இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். தனிப்படை போலீசாரும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News