உள்ளூர் செய்திகள்

கொட்டாரம் வைகுண்ட பதியில் ரூ.15 லட்சம் செலவில் மழைநீர் வடிகால் ஓடை - அலங்கார தரைத்தளம்

Published On 2023-05-07 09:54 GMT   |   Update On 2023-05-08 08:52 GMT
  • மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் இருந்து வந்தது.
  • வடிகால் ஓடையுடன் அலங்கார தரைதளம் அமைக்க ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.

கன்னியாகுமரி :

கொட்டாரம் பேரூராட்சிக்குட்பட்ட 1-வது வார்டு பகுதியான மருந்து வாழ்மலை வைகுண்ட பதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் மழைக்காலங்களில் மழைநீர் தெருக்களில் தேங்கி வெளியே செல்ல முடியாத நிலை இருந்து வந்தது. இதனால் அந்த பகுதியில் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் இருந்து வந்தது.

இதைத்தொடர்ந்து அந்தப் பகுதி பொதுமக்கள் மழைக்காலங்களில் மழை நீர் வெளியேறுவதற்கு வசதியாக தெருவில் அலங்கார தரை கற்கள் பதித்து மழை நீர் வடிகால் ஓடை அமைத்து தரும்படி நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து கொட்டாரம் பேரூராட்சி 1-வது வார்டு கவுன்சிலராக இருந்த சரிபா விடுத்த கோரிக்கையை ஏற்று தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து கொட்டாரம் அருகே உள்ள பொத்தையடி வைகுண்ட பதியில் மழைநீர் வடிகால் ஓடையுடன் அலங்கார தரைதளம் அமைக்க ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.

இதைத்தொடர்ந்து கொட்டாரம் வைகுண்டபதி பகுதியில் உள்ள தெருவில் மழைநீர் வடிகால் ஓடையுடன் அலங்கார தரைதளம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது.

விழாவுக்கு அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஜெஸீம் தலைமை தாங்கினார். கொட்டாரம் பேரூர் அ.தி.மு.க. செயலாளர் ஆடிட்டர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்த ரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதிதாக அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் ஓடை மற்றும் அலங்கார தரைத்தளத்தை திறந்து வைத்து பேசினார்.

இதில் கொட்டாரம் பேரூர் அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்பபிரிவு செயலாளர் வக்கீல் ராஜேஷ், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பேராசிரியர் நீலபெருமாள், கொட்டாரம் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் செல்வன், பேரூர் செயலாளர்கள் ராஜபாண்டியன், மணிகண்டன், மனோகரன், தாமரை தினேஷ், வீரபத்திரன் ஒன்றிய பொருளாளர் பாலமுருகன், மருங்கூர் பேரூராட்சி தலைவி லட்சுமி சீனிவாசன் அ.தி.மு.க. கிளை செயலாளர்கள் தங்கவேல், ஜெபா செல்வின், வக்கீல் பாலன், பேரூராட்சி முன்னாள் வார்டு கவுன்சிலர்கள் இல.கி.கணபதி, சுரேஷ், அரசு ஒப்பந்ததாரர் சுதா பாஸ்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News