குமரி கிழக்கு மாவட்ட அ.ம.மு.க. புதிய நிர்வாகிகள் நியமனம்
- புதிய நிர்வாகிகளை டி.டி.வி. தினகரன் நியமனம் செய்துள்ளார்.
- அகத்தீஸ்வரம் பேரூர் செயலாளராக கண்ணன், தென் தாமரைகுளம் பேரூர் செயலாளர் நாககிருஷ்ணன்
நாகர்கோவில்:
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகளை டி.டி.வி. தினகரன் நியமனம் செய்துள்ளார்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் மணிகண்டன், வெளிநாடு வாழ் தமிழர் நலப்பிரிவு செயலாளர் சந்திரசேகர், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெகன் ஆனந்த், குருந்தன்கோடு வடக்கு ஒன்றிய செயலாளர் கலைஞர், தெற்கு ஒன்றிய செயலாளர் தினேஷ் குமார், தோவாளை மேற்கு ஒன்றிய செயலாளர் மரிய ஜோசப் ஆஞ்சேல, கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அகத்தீஸ்வரம் பேரூர் செயலாளராக கண்ணன், தென் தாமரைகுளம் பேரூர் செயலாளர் நாககிருஷ்ணன், அஞ்சுகிராமம் பேரூர் செயலாளர் ஆனந்த், தேரூர் பேரூர் செயலாளர் சிவசுப்பிரமணியம், ஆரல்வாய்மொழி பேரூர் செயலாளர் பொன்.பாண்டியன், கணபதிபுரம் பேரூர் செயலாளர் வேல்முருகன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.