உள்ளூர் செய்திகள்

புத்தளம் அருகே மது குடிக்க மனைவி பணம் தராததால் தொழிலாளி தற்கொலை

Published On 2023-07-03 08:49 GMT   |   Update On 2023-07-03 08:49 GMT
  • மன வேதனை அடைந்த அவர், விஷம் குடித்து வீட்டில் மயங்கினார்.
  • சிகிச்சை பலனின்றி இன்று காலை ராஜன் வில்பிரிட் மோகன் பரிதாபமாக இறந்தார்.

கன்னியாகுமரி :

புத்தளம் அருகே உள்ள மணவாளபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜன் வில்பிரிட் மோகன் (வயது 62). இவருக்கு மது பழக்கம் இருந்து வந்தது.

சம்பவத்தன்று ராஜன் வில்பிரிட் மோகன், தனது மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் தர மறுத்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த அவர், விஷம் குடித்து வீட்டில் மயங்கினார்.

வாயில் நுரை தள்ளியபடி கிடந்த ராஜன் வில்பிரிட் மோகனை, மனைவி உஷாகுமாரி மற்றும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை ராஜன் வில்பிரிட் மோகன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அவரது மனைவி புகாரின் பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News