உள்ளூர் செய்திகள்

குலசேகரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கூலி தொழிலாளி பலி - வாலிபர் மீது வழக்குபதிவு

Published On 2022-12-08 06:54 GMT   |   Update On 2022-12-08 06:54 GMT
  • வெண்டலிகோடு சந்திப்பில் இருந்து வீட்டுக்கு தேவையான பொருள்கள் வாங்கிகொண்டு நடந்து சென்று கொண்டு இருந்தார்.
  • ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர். 2 நாட்கள் சிகிட்சை அளித்தும் பலன் இல்லாமல் நேற்று மாலை இறந்துவிட்டார்

கன்னியாகுமரி :

குலசேகரம் அருகே வெண்டலிகோடு பகுதியில் வசிப்பவர் பொன்னையன் வயது (65). இவர் மாற்றுதிறனாளி கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வருகிறார். இவருக்கு மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர்.

இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் வெண்டலிகோடு சந்திப்பில் இருந்து வீட்டுக்கு தேவையான பொருள்கள் வாங்கிகொண்டு நடந்து சென்று கொண்டு இருந்தார்.

அப்போது வலியாற்று முகத்தில் இருந்து குலசேகரம் நோக்கி அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் ஒரு வாலிபர் வந்து கொண்டு இருந்தார். நடந்து சென்ற தொழிலாளி பொன்னை யன் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் பொன்னையனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் உதவியோடு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர். 2 நாட்கள் சிகிட்சை அளித்தும் பலன் இல்லாமல் நேற்று மாலை இறந்துவிட்டார். மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபருக்கு தலை காலில் காயம் ஏற்பட்டது. அவர் குலசேகரம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிட்சை பெற்று வருகிறார். இவர் குலசேகரம் அருகே செறுதிக்கோணம் பகுதியை சேர்ந்த ஜெனிஷ் (35) என்பது தெரியவந்தது. பொன்னையனின் மனைவி அமராவதி கொடுத்த புகாரின் பேரில் குலசேகரம் போலிசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News