உள்ளூர் செய்திகள்

வில்லுக்குறி அருகே மத பிரசாரத்திற்கு சென்றவர் மாயம்

Published On 2022-08-18 09:12 GMT   |   Update On 2022-08-18 09:12 GMT
  • கடந்த சில நாட்களாக வெளியூரில் மத பிரசாரம் செய்து வந்தார்
  • இரணியல் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை

கன்னியாகுமரி :

இரணியல் அருகே வில்லுக்குறி கரிச்சான் கோடு என்ற இடத்தை சேர்ந்தவர் ஜெபசிங் (வயது 35). இவர் கடந்த சில நாட்களாக வெளியூரில் மத பிரசாரம் செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு தொலைபேசியில் பேசி உள்ளார். இந்த நிலையில் அவர் மாயமானார். அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று அவரது சகோதரர் ஸ்டாலின் (35) இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இது குறித்து இரணியல் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News