உள்ளூர் செய்திகள்

ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி அம்மா உணவகத்தில் மேயர் மகேஷ் திடீர் ஆய்வு

Published On 2022-09-17 10:07 GMT   |   Update On 2022-09-17 10:07 GMT
  • பொதுமக்கள் புகாரை தொடர்ந்து நடவடிக்கை
  • அம்மா உணவகத்தில் உணவின் தரத்தை பார்வையிட்ட மேயர் சாப்பிட்டு பார்த்தார்.

நாகர்கோவில்:

ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் தரமான உணவு வழங்கப்படவில்லை என்று மாநகராட்சி மேயர் மகேசுக்கு புகார்கள் சென்றது.

இதையடுத்து இன்று மதியம் மாநகராட்சி மேயர் மகேஷ் திடீரென அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு வழங்க தயார் செய்து வைக்கப்பட்டிருந்த உணவின் தரத்தை பார்வையிட்ட அவர் அதை சாப்பிட்டு பார்த்தார். அவருடன் மாநகர நகர் நல அதிகாரி ராம்குமார், சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் அலுவலர்கள் உடன் சென்றிருந்தனர்.

மேயர் மகேஷ் ஆய்வு நடத்திய போது மதிய உணவு விநியோகம் நடந்து கொண்டிருந்தது. ஏராளமான பொதுமக்கள் உணவு வாங்க நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது உணவு விநியோகம் தொடர்பாக உள்ள பண இருப்பு விவரத்தை ஆய்வு செய்ய மேயர் உத்தரவிட்டார் .

இதையடுத்து சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் பில்லிங் எந்திரத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து உணவகத்தில் இருந்த உணவு இருப்பு விவரத்தை ஆய்வு செய்தனர்.ஆய்வின் போது மாநகரச் செயலாளர் ஆனந்த் , ஒன்றிய செயலாளர் மதியழகன் மற்றும் கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News