உள்ளூர் செய்திகள்

ஆரல்வாய்மொழி அருகே கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

Published On 2022-06-17 06:41 GMT   |   Update On 2022-06-17 06:41 GMT
  • வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்
  • ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

கன்னியாகுமரி :

ஆரல்வாய்மொழி அருகே அனந்த பத்மநாப புரம் மேலத்தெரு ராமலிங்கம் மகன் முருகவேல் (வயசு 45) இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். சில வருடங்களாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். நீண்ட நேரம் கதவு திறக்காததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து கதவை உடைத்து பார்த்தபோது முருகவேல் மயங்கி கிடக்க உடனடியாக இவரை ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள்.

இங்கு சிகிச்சை பலனில்லாமல் முருகவேல் பரிதாபமாக இறந்தார் இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News