உள்ளூர் செய்திகள் (District)
மோட்டார் சைக்கிள்கள் மோதல்: 2 பேர் காயம்
- சாலையில் தூக்கி வீசப்பட்ட உண்ணி கிருஷ்ணன் படுகாயமடைந்தார்.
- சஜின் என்பவரும் காயம் அடைந்து அதே ஆஸ்பத்திரியில் வெளிநோயாளியாக அனுமதிக்கப்பட்டார்
கன்னியாகுமரி :
புதுக்கடை அருகே உள்ள பார்த்திபபுரம் பகுதியை சேர்ந்தவர் உண்ணி கிருஷ்ணன் (வயது 71). இவர் மோட்டார் சைக்கிளில் மார்த்தண்டம் - தேங்கா பட்டணம் சாலையில் சென்ற போது உதச்சி கோட்டை பகுதியில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட உண்ணி கிருஷ்ணன் படுகாயமடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதிய மோட்டார் சைக்கிளை ஒட்டி வந்த காஞ்ஞாம்புறம் பகுதி சரல் முக்கு என்ற இடத்தை சேர்ந்த சஜின் (22) என்பவரும் காயம் அடைந்து அதே ஆஸ்பத்திரியில் வெளிநோயாளியாக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்