உள்ளூர் செய்திகள்

களியக்காவிளையில் கடையில் ரூ.85 ஆயிரம் திருடிய மர்ம பெண் - போலீசார் விசாரணை

Published On 2023-06-24 06:50 GMT   |   Update On 2023-06-24 06:50 GMT
  • பெண் அங்கு வந்து கடையில் பொருட்கள் வாங்குவது போல் உரிமையாளரிடம் பேச்சு கொடுத்துள்ளார்.
  • சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி போலீசார் மர்ம பெண்ணை தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி :

களியக்காவிளை அருகே ஆர்.சி.தெரு பகுதியை சேர்ந்தவர் நிர்மலா. இவர் கடந்த 5 வருடங்களாக களியக்காவிளை சந்திப்பு பகுதியில் வெற்றிலை,பாக்கு கடை நடத்தி வருகிறார்.

இவர் நேற்று காலை கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது ஒரு பெண் அங்கு வந்து கடையில் பொருட்கள் வாங்குவது போல் உரிமையாளரிடம் பேச்சு கொடுத்துள்ளார்.

பிறகு நிர்மலா கடைக்கு தேவையான தண்ணீர் எடுப்பதற்கு பக்கத்து கடைக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் திரும்பி வந்தபோது அந்த மர்மபெண் அங்கிருந்து சென்றுள்ளார். இதனால் சந்தேகமடைந்த நிர்மலா கடைக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பேக்கை காணவில்லை. அதில் ரூ.85 ஆயிரம் மற்றும் ஆதார் கார்டை வைத்திருந்தார். இதனை மர்ம பெண் திருடி சென்றது தெரியவந்தது. மேலும் நிர்மலா இதுகுறித்து களியக்காவிளை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி போலீசார் மர்ம பெண்ணை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News