உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது தாக்குதல்

Published On 2023-06-04 06:34 GMT   |   Update On 2023-06-04 06:34 GMT
  • 18 பேர் மீது வழக்கு
  • படுகாயம் அடைந்த இருவரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாகர்கோவில் :

கோட்டார் ஊட்டு வாழ்மடம் பகுதியை சேர்ந்த வர் ஹரிஹர செல்வம் (வயது 34).

மேல காமரா ஜர்புரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (40). இவர்கள் இருவரும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆவார்கள். இவர்கள் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு கல்லூரி பகுதி யில் நின்று கொண்டிருந்த னர்.

அப்போது அங்கு வந்த நாம் தமிழர் கட்சி நிர்வா கிகள் பெர்லின் ஜோ, விஜய ராகவன், ஜெயரின் மற்றும் கண்டால் தெரியும் 18 பேர் சேர்ந்து ஹரிஹர செல்வம், சதீஷ்குமார் இருவரையும் சரமாரியாக தாக்கினார்கள். இரும்பு கம்பியாலும் தாக்கப் பட்டனர். இதில் ஹரிஹர செல்வம், சதீஷ்குமார் இருவரும் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த இருவரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஹரிஹர செல்வம் வடசேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் பெர்லின் ஜோ, விஜயராகவன், ஜெயரின் மற்றும் கண்டால் தெரியும் 18 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 294பி, 323, 324, 506 2 ஐபிசி ஆகிய 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.

Tags:    

Similar News