உள்ளூர் செய்திகள்

சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு தேசிய அளவிலான விருது

Published On 2022-07-18 08:49 GMT   |   Update On 2022-07-18 08:49 GMT
  • ஐ.சி.டி.அகாடமி ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் சிறப்பாக செயல்படும் பொறியியல் கல்லூரிகளை தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்குகிறது.
  • விருதினை அமைச்சர் மனோ தங்கராஜிடமிருந்து கல்லூரி முதல்வர் டாக்டர் மகேஸ்வரன் பெற்றுக்கொண்டார்.

நாகர்கோவில் :

இந்திய தகவல் தொழில் நுட்பவியல் துறையின் கீழ் செயல்படும் ஐ.சி.டி.அகாடமி ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் தகவல் தொழில்நுட்பகல்வியில் சிறப்பாக செயல்படும் பொறியியல் கல்லூரிகளை தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது.

இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது. விழாவில் தகவல் தொழில்நுட்பத்தில் தொழிற்சாலைகளுடனான சிறந்த செயல்பாட்டுக்கான விருது சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு கிடைத்தது. விருதினை அமைச்சர் மனோ தங்கராஜிடமிருந்து கல்லூரி முதல்வர் டாக்டர் மகேஸ்வரன் பெற்றுக்கொண்டார்.

கல்லூரி சார்பில் பேராசிரியர்கள் ஆன்றோ குமார் மற்றும் ஆன்றோ சேவியர் ரோச் கலந்து கொண்டனர். கல்லூரிக்கு இவ்வாண்டுக்கான தேசிய அளவிலான விருது கிடைத்தமைக்கு கல்லூரி தாளாளர் டாக்டர் மரிய வில்லியம், கல்லூரி நிதி காப்பாளர் பிரான்சிஸ் சேவியர், துணை முதல்வர் கிரிஸ்டஸ் ஜெயசிங், அனைத்து துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்தினர்.

Tags:    

Similar News