உள்ளூர் செய்திகள்

சாலையில் மயங்கி விழுந்த முதியவர் சாவு

Published On 2023-04-06 08:21 GMT   |   Update On 2023-04-06 08:21 GMT
  • 15 நாட்களாக உடலை வாங்க யாரும் வராததால் அடக்கம் செய்வதில் சிக்கல்
  • அரசு மூலம் உடல் அடக்கம் செய்யப்படும்

கன்னியாகுமரி :

தக்கலை அருகே மணலி சந்திப்பில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கி கிடப்பதாக தக்கலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.

அங்கு மருத்துவர் பரிசோதனை செய்து விட்டு முதியவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து பத்மநாபபுரம் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் அடிப்படையில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்து போன முதியோரின் உறவினர்களை விசாரித்து வந்தனர். இந்த நிலையில் 15 நாட்கள் ஆன பிறகும் இறந்த முதியவரை தேடி உறவினர்கள் யாரும் வரவில்லை. தற்போது முதியவரின் உடல் தக்கலை அரசு மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கில் உள்ளது.

இன்னும் ஒரு வாரத்திற்குள் இவரது முகவரி கண்டு பிடிக்கப்பட்டு உடல் ஒப்படைக்கபட வில்லையெனில் அரசு மூலம் உடல் அடக்கம் செய்யப்படும் என தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தெரிவித்தார்.

15 நாட்களாக முதியவர் உடலை உறவினர்கள் யாரும் வாங்க வராத தால் என்ன செய்வதென தெரியாமல் போலீசார் தவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News