உள்ளூர் செய்திகள்

முகிலன்குடியிருப்பில் குடிநீர் தொட்டி திறப்பு

Published On 2023-09-01 06:53 GMT   |   Update On 2023-09-01 06:53 GMT
  • தென்தாமரைகுளம் பேரூராட்சி தலைவர் கார்த்திகா பிரதாப் குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார்.
  • முகிலன்குடியிருப்பு ஊர்த்தலைவர் ஆர்.எஸ்.பார்த்தசாரதி தலைமை தாங்கினார்

நாகர்கோவில் :

குழித்துறை கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் முகிலன்குடியிருப்பு முத்தாரம்மன் கோவில் அருகே குடிநீர் தொட்டி திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு முகிலன்குடியிருப்பு ஊர்த்தலைவர் ஆர்.எஸ்.பார்த்தசாரதி தலைமை தாங்கினார். சங்க தலைவர் சிந்து நல்லபெருமாள், செயலர் சவுதாமினி, உறுப்பினர் சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்தாமரைகுளம் பேரூராட்சி தலைவர் கார்த்திகா பிரதாப் குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் முகிலன்குடியிருப்பு ஊர் செயலர் செல்லசிவலிங்கம், பொருளாளர் கிருஷ்ணகோபால், அறங்காவலர்கள் முத்துமாலை, அப்பாத்துரை, சுயம்பு, துணைத்தலைவர் மல்லிகா, வார்டு கவுன்சிலர்கள் பாமா, அமுதா, கோம்பவிளை ஊர்த்தலைவர் நாகமணி, தி.மு.க. நிர்வாகி தாமரை பிரதாப் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News