உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் பிக்பாக்கெட் திருடர்கள் கைவரிசை

Published On 2023-04-08 09:10 GMT   |   Update On 2023-04-08 09:10 GMT
  • பாதுகாப்பு பணிக்கு கூடுதல் போலீசார் நியமிக்கப்படுவார்களா?
  • வடசேரி பஸ் நிலையத்திலும் கூடுதல் போலீசாரை நியமித்து கண்காணிப்பு

நாகர்கோவில் :

நாகர்கோவில் நகரின் மையப்பகுதியில் அண்ணா பஸ் நிலையம் அமைந்துள் ளது. இந்த பஸ் நிலையத்தில் காலை, மாலை நேரங்களில் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழியும்.

பள்ளி செல்லும் மாண வர்களும் வீட்டுக்கு செல்வ தற்காக அதிக அளவு வருவ தால் கூட்டம் அதிகமாக காணப்படும். இதனால் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து செல்லும் பஸ்களில் ஏறுவதற்கு பொதுமக்கள் முண்டியடித்து கொண்டு ஏறி வருகிறார்கள். இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட் திருடர்கள் கைவரிசை காட்டும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

நேற்று மாலை பயணி ஒருவர் பஸ்சில் ஏறும்போது அவரது பாக்கெட்டில் இருந்த பணத்தை பிக்பாக் கெட் திருடர்கள் நைசாக எடுத்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர். மேலும் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்களும் நடந்த வண்ணம் உள்ளன. இதை தடுக்கும் வகையில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உடனடி நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஏற்கனவே அண்ணா பஸ் நிலையத்தில் பாது காப்பிற்கு போலீசார் நிய மனம் செய்யப்பட்டுள்ள னர். கூடுதலாக போலீசாரை நியமித்து பிக்பாக்கெட் திருடர்களை பிடிக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. பிக்பாக்கெட் திருடர்களை கண்காணிக்கும் வகையில் அண்ணா நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலை யத்தில் சி.சி.டி.வி. கேம ராக்களை ஒருங்கிணைத்து கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டால் ஓரளவு பிக்பாக்கெட் மற்றும் திருட்டு சம்ப வங்களை தடுக்க முடியும். குடிமகன்கள் பஸ் நிலையத்தில் ரகளையில் ஈடுபடும் சம்பவங்களும் அதிகமாக உள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் அடிக்கடி பஸ் நிலையத்தில் மோதி கொண்டும் வருகிறார்கள். இதை மனதில் கொண்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உடனடி நடவடிக்கையாக பாதுகாப்பை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல் வடசேரி பஸ் நிலையத்திலும் கூடுதல் போலீசாரை நியமித்து கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

Tags:    

Similar News