உள்ளூர் செய்திகள்
குலசேகரம் அருகே பட்டு போன மரத்தை வெட்டி அகற்ற வேண்டும்
- பொதுப்பணித்துறைக்கு கோரிக்கை
- பொதுமகக்கள் நலன் கருதி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்
கன்னியாகுமரி:
அஞ்சுகண்டறை சந்திப்பிலிருந்து சானல்கரை வழியாக பேச்சிப்பாறை செல்லும் சாலையில் அயனிமரம் ஒன்று பட்டுபோய் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.
அந்த வழியாக தினமும் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் தினமும் ஏராளமானோர் கடந்து செல்கிறார்கள். பெரும் விபத்து நடைபெறும் முன் அந்த அயனி மரத்தை வெட்டி அகற்ற வேண்டும்.
பொதுமகக்கள் நலன் கருதி போர்க்கால அடிப்படையில் பட்டுபோன அயனி மரத்தை ஏலமிட்டு அப்புறபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திற்பரப்பு பேரூராட்சி துணைத் தலைவர் ஸ்டாலின்தாஸ் பொதுபணித்துறைக்கு கோரிக்கை விடுத்தார்.