உள்ளூர் செய்திகள் (District)

இரணியல் அருகே லாரி மோதி பெண் பலி - டிரைவர் மீது வழக்கு

Published On 2023-03-13 08:56 GMT   |   Update On 2023-03-13 08:56 GMT
  • நிலை தடுமாறி கீழே விழுந்த நசீரா மீது டாரஸ் லாரி சக்கரம் ஏறி இறங்கியது
  • பலத்த காயமடைந்த முகமது இர்பானை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

கன்னியாகுமரி :

வேர்க்கிளம்பி காட்டு விளை பகுதியை சேர்ந்தவர் முகம்மது இர்பான் (வயது 38). துணி வியாபாரி. இவர் நேற்று மாலை அவரது தாயார் நசீரா (55) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

வில்லுக்குறி பாலம் அருகில் சென்ற போது பின்னால் வேகமாக வந்த டாரஸ் லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. நிலை தடுமாறி கீழே விழுந்த நசீரா மீது டாரஸ் லாரி சக்கரம் ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கிய நசீரா சம்பவ இடத்தில் பலியானார்.

பலத்த காயமடைந்த முகமது இர்பானை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

இது குறித்து முகமது இர்பான் இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரின் இரணியல் போலீசார் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற டாரஸ் லாரி டிரைவர் காக்கச்சல் மணியன்குழியை சேர்ந்த மைக்கேல்ராஜ் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News