உள்ளூர் செய்திகள் (District)

இரணியல் அருகே குடிபோதையில் தவறி விழுந்து தொழிலாளி சாவு

Published On 2022-06-22 07:09 GMT   |   Update On 2022-06-22 07:09 GMT
  • திருவனந்தபுரம் அருகே உள்ள கரக்குளம் அடுத்த கச்சாளி களத்துக்கால் பகுதியை சேர்ந்தவர்.
  • இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி:

திருவனந்தபுரம் அருகே உள்ள கரக்குளம் அடுத்த கச்சாளி களத்துக்கால் பகுதியை சேர்ந்தவர் ராகவன்நாயர் மகன் ஸ்ரீகண்டன் நாயர் (வயது 46). குடும்பத்துடன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார்.

ஸ்ரீகண்டன் நாயருக்கு சொரியாசிஸ் நோய் இருந்ததால் சிகிச்சைக்காக அவரது நண்பர் வில்லுக்குறி திருவிடைக்கோடு தவசிமுத்து வீட்டிற்கு வந்தார். நேற்று மதியம் ஸ்ரீகண்டன் நாயர் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. அப்போது குளியல் அறைக்கு சென்றவர் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்ததில் பின்தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவரது நண்பர் தவசிமுத்து அருகில் இருந்தவர்கள் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஸ்ரீகண்டன்நாயர் இறந்த தகவல் அவரது சகோதரர் மணிகண்டன் நாயருக்கும் தெரிவிக்கப்பட்டது. மணிகண்டன் நாயர் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News