உள்ளூர் செய்திகள்

சாயர்புரம் அருகே கருப்பசாமி கோவில் ஆடி கொடை விழா

Published On 2023-08-04 08:42 GMT   |   Update On 2023-08-04 08:42 GMT
  • கொடை விழாவில் சிறப்பு அபிஷேகம் அன்னதானம், வில்லிசை கச்சேரி நடைபெற்றது.
  • திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள், சிறுமிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சாயர்புரம்:

சாயர்புரம் அருகே உள்ள முள்ளன்விளை கருப்பசாமி கோவில் கொடை விழா நடந்தது. இதில் அலங்கார பூஜை, சிறப்பு அபிஷேகம் மற்றும் திருவிளக்கு பூஜை, அன்னதானம், வில்லிசை கச்சேரி நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள், சிறுமிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிளக்கு பூஜை ஏற்பாடுகளை கருப்பசாமி கோவில் தர்மகர்த்தா பாலமோகன் செய்து இருந்தார்.

Tags:    

Similar News