உள்ளூர் செய்திகள்
கஞ்சா விற்றவரை கைது செய்து போலீசார் விசாரணை
கரூர்,
கரூர் சேலம் பைபாஸ் சாலை மண்மங்கலம் சமத்துவபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறு வதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் வந்தது. இதனை யடுத்து, அங்கு சென்று மதுவிலக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசா ரணையில், ஆண்டா ங்கோயில் பகுதியை சேர்ந்த சரவணக்குமார் (வயது 27) என்பவர். அந்த பகுதியில் கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது.இதனையடுத்து, சரவணக்குமாரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ரூ. 11ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 100 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.