உள்ளூர் செய்திகள் (District)
வெறி நாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் பலி
- கரூர் க.பரமத்தியில் இரண்டு பட்டிக்குள் புகுந்து வெறிச்செயல்
- கால்நடை மருத்து குழுவினர், உயிரிழந்த ஆடுகளை பரிசோதனை செய்தனர்
கரூர்,
கரூர் மாவட்டம், க.பரமத்தியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 45). விவசாயியான இவர் பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், பட்டிக்குள் புகுந்த நாய்கள், கடித்ததில் ஏழு ஆடுகள் இறந்தன. அதேபோல், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு விவசாயி ரவி (50) என்பவரது பட்டியில் இருந்த, மூன்று ஆடுகள், நாய்கள் கடித்ததில் உயிரிழந்தன. தகவல் அறிந்த க.பரமத்தி உதவி கால்நடை மருத்துவர் தமிழரசன் குழுவினர், உயிரிழந்த ஆடுகளை பரிசோதனை செய்தனர். இந்த சம்பவம், அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.