உள்ளூர் செய்திகள்
பாலியல் தொல்லை செய்த முதியவருக்கு 10 ஆண்டு சிறை
- பாலியல் தொல்லை செய்த முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது
- இந்த வழக்கு விசாரணை கரூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது
கரூர்:
கரூர் மாவட்டம், சோமூர் பகுதியை சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 61) இவர், அதே பகுதியை சேர்ந்த 27 வயதுடைய மனவளர்ச்சி குன்றிய பெண்ணுக்கு கடந்த, 2020-ம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண்ணின், தாய் கொடுத்த புகாரின்பேரில், கரூர் மகளிர் போலீசார், அர்ஜூனனை கைது செய்தனர், இந்த வழக்கு விசாரணை கரூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.விசாரணை முடிந்து வழங்கப்பட்ட தீர்ப்பில் அர்ஜூனனுக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 100 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி நசீமா பானு உத்தரவிட்டார்.