உள்ளூர் செய்திகள் (District)

கரூர் பகுதியில் மது விற்ற 12 பேர் கைது

Published On 2023-05-17 07:19 GMT   |   Update On 2023-05-17 07:19 GMT
  • கரூர் பகுதியில் மது விற்ற 12 பேர் கைது செய்யப்பட்டனர்
  • அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கரூர்,

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாபேட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அப்பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மது விற்ற மேட்டு மகாதானபுரம் பகுதியை சேர்ந்த அன்னக்கிளி (வயது55), நதியா (35), கிருஷ்ணமூர்த்தி (51), மதிவாணன் (55), வேங்கம்பட்டி செல்வராஜ் (38), பழைய ஜெயங்கொண்டம் ராஜூ (62) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் பஞ்சப்பட்டி பகுதியைச் சேர்ந்த கோபால் (54), மலர் (43), மேலும் மாயனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மணவாசி கந்தசாமி (46), கீழடை முத்துசாமி (71), மாணிக்கபுரம் தங்கவேல் (59), சின்னகிணத்துப்பட்டி கோபால் (47) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News