உள்ளூர் செய்திகள்

வாகன விபத்தில் 2 வாலிபர்கள் படுகாயம்

Published On 2023-03-10 06:43 GMT   |   Update On 2023-03-10 06:43 GMT
  • வாகன விபத்தில் 2 வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர்
  • மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

கரூர்:

குளித்தலையை அடுத்த, நங்கவரம் தமிழ்ச்சோலை, கிழக்கு தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 25). அதே பகுதியை சேர்ந் தவர் விஜயராகவன் (22). இவர்கள் இருவரும், பார்த்திபனின் இரு சக்கர வாகனத்தில் பெருகமணி சென்று விட்டு, மீண்டும் திரும்பி வந்து கொண்டிருந்தனர். பெருகமணி - நங்கவரம் சாலையில், அனஞ்சனுார் நார்மில் அருகே, வந்தபோது, கரூர், வெண்ணைமலையை சேர்ந்த சரவணன் (46) என்பவர் ஓட்டி வந்த கார், பைக் மீது மோதியது. இதில் பார்த்திபனும், விஜயராகவனும் படுகாயமடைந்தனர். இதைய டுத்து இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின்படி, கார் டிரைவரான சரவணன் மீது குளித்தலை போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News