உள்ளூர் செய்திகள் (District)
ரூ.10 கோடி மதிப்பிலான 54 பணிகள் தொடக்கம்
- மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்
- கலெக்டர் உள்ளிட்டோர் பங்கேற்பு
கரூர்,
கரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளான ஆண்டாள் கோவில் கிழக்கு ஊராட்சி சின்னாண்டாங்கோவில் பகுதியில் ரூ10 கோடி மதிப்பிலான 54 பணிகளை மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். இந்த தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் , அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் தாரனி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வாணிஈஸ்வரி கலந்து கொண்டனர்.