உள்ளூர் செய்திகள் (District)

புன்னன்சத்திரம் அருகே தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு

Published On 2023-04-28 06:59 GMT   |   Update On 2023-04-28 06:59 GMT
  • புன்னன்சத்திரம் அருகே தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தனர்
  • இதுகுறித்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

கரூர்:

கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் ஆர்.ஜி நகர் பகுதியில் உள்ள ஒரு மாடி வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருபவர் மோகன் (வயது 38). கல்குவாரியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரேவதி (32), இவர்களுக்கு ஜனனி(8), சிவாணி(6) என்ற 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் மோகன் குடும்பத்தில் உள்ளவர்களுடன் தூங்க சென்றார். இரவு சுமார் 9 மணிக்கு வீட்டுக்கு வந்த மர்ம நபர் ஒருவர் கதவை தட்டி உள்ளார்.

அப்போது மோகன் எழுந்து சென்று கதவை திறந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர் கையில் வைத்திருந்த பட்டாக்கத்தியை காட்டி மிரட்டி வீட்டில் உள்ள பணம் நகைகளை எடுத்து வருமாறு கூறியுள்ளார்.அதற்கு மோகன் வீட்டில் பணம் ஏதும் இல்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து சட்டை பையில் வைத்திருந்த ரூபாய் ஆயிரத்தை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மர்ம நபர் சென்று விட்டார். இதுகுறித்து மோகன் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.


Tags:    

Similar News