கரூர் மாவட்டத்தில் அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு கலைத்திறன் போட்டி
- கரூர் மாவட்டத்தில் அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு கலைத்திறன் போட்டி நடைபெற்றது
- போட்டியில் சுமார் 20க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
கரூர்:
கரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவி களிடையே கலைத்திறனை மேம்படுத்தும் வகையில் கலைத்திறன் போட்டிகள் புலியூர் செட்டிநாடு வித்யாமந்திர் பள்ளியில் நடைபெற்றது. மாநில கல்வித்துறை சார்பில் நடைபெற்ற இப்போட்டியை புலியூர் செட்டிநாடு வித்யாமந்திர் பள்ளியின் முதல்வர் எம்.எஸ்.வித்யா தொடங்கி வைத்தார். பள்ளிச் செயலாளர்கள் முத்துக்குமரன், செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போட்டியில் மாணவ, மாணவிகளின் திறனை வெளிப்படுத்தும் வகையில் நடனம், பேச்சு, கட்டுரை, நகைச்சுவை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், பள்ளிக்கும் பரிசுகள் செட்டிநாடு வித்யா மந்திர் பள்ளி சார்பில் வழங்கப்பட்டன. போட்டியில் கரூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 20க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.