உள்ளூர் செய்திகள்

மக்களை மகிழ்விக்கும் சாரல் மழை

Published On 2022-09-01 07:34 GMT   |   Update On 2022-09-01 07:34 GMT
  • சாரல் மழையால் மக்களை மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
  • குறிப்பிடத்தக்க மழை பெய்யாமல் உள்ளது

கரூர்:

கரூர் மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் இரவு வரை விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருவதால் அனைத்து தரப்பினர்களும் சந்தோஷம டைந்துள்ளனர்.

கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கடந்த சில நாட் களுக்கு முன்பு மாவட்டம் முழுதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இரண்டு நாட்களாக மழையின் தாக்கம் குறைந்து, வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்த நிலையில், நேற்று மதியம் முதல் இரவு வரை மாவட்டம் முழுதும் சீதோஷ்ணநிலையில் மாற்றம் ஏற்பட்டு, லேசான அளவில் சாரல் மழை பரவலாக பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து, ஜில்லென்று காற்று மாவட்டம் முழுதும் வீசுவதால் அனைத்து தரப்பினர்களும் சந்தோஷமடைந்துள்ளனர்.

மேலும், கருர் மாவட் டத்தில் தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரை யிலான காலக்கட்டத்தில் குறிப்பிடத்தக்க மழை பெய்யாமல் உள்ளது. எனவே, செப்டம்பர் மாதத்திலாவது அதிகளவு மழை கரூர் மாவட்டத்தில் பெய்ய வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags:    

Similar News