உள்ளூர் செய்திகள் (District)

மின்சாரம் பாய்ந்து கட்டட தொழிலாளி பலி

Published On 2023-01-31 08:48 GMT   |   Update On 2023-01-31 08:48 GMT
  • சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழப்பு
  • போலீசார் விசாரணை

கரூர்,

கரூர் மாவட்டம், வெங்கமேடு, சத்திய மூர்த்தி நகரை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 52) கட்டட தொழிலாளி. இவர், நேற்று காலை, வெங்கமேடு, ஜாமியா நகரில், புதிய வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, டிப்பர் லாரியில் கொண்டுவரப்பட்ட எம்.சான்ட் மணலை சரிபார்க்க, நாகராஜ் லாரியில் ஏறினார். இந்நிலையில், டிப்பர் லாரியின் மேல் பகுதியில் சென்ற மின் கம்பி இவர் மீது உரசியது. இதில் நாகராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.இதுகுறித்து வெங்கமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News