உள்ளூர் செய்திகள்

கரூர் வள்ளுவர் கல்லுாரியில் சமையல் போட்டி

Published On 2023-03-01 10:16 GMT   |   Update On 2023-03-01 10:16 GMT
  • கரூர் வள்ளுவர் கல்லுாரியில் சமையல் போட்டி நடைபெற்றது
  • நிகழ்ச்சியில் செப் தீனா தயாளன் கலந்து கொண்டு பேசினார்

கரூர்:

கரூர் புத்தாம்பூர் வள்ளுவர் கலை அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் "வாங்க சமைக்கலாம்" என்ற தலைப்பில் பிரியாணி மேளா சமையல் போட்டி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் இருளப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியில் செயலாளர் ஹேமலதா செங்குட்டுவன், துணை செயலாளர் ராகவி நிகில் கண்ணன், கேட்டரிங் பயிலும் கல்லூரி மாணவ மாணவியர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக டிவி புகழ் டிஜிட்டல் தொழில் முனைவர் ஃசெப் தீனா தயாளன் கலந்து கொண்டார்.கல்லூரியில் கேட்டரிங் பயின்று வரும் மாணவ மாணவியர் மூங்கில் மாட்டுக்கறி பிரியாணி, சிக்கன் பரோட்டா பிரியாணி, கொங்குநாடு வெள்ளை பிரியாணி, வாத்து பிரியாணி,சிந்தி பீப் பிரியாணி, சிக்கன் மண் பானை பிரியாணி, மண் பானை ஆட்டுக்கறி பிரியாணி, பிரவுன் பிரி யாணி என 22 வகையான பிரியாணி வகைகளை சமைத்து அசத்தினர்.

அத்தோடு பாரம்பரிய உணவு வகையிலான ராகி, கம்பு, சோளம், கேழ்வரகு, சாமை, தினை போன்றவற்றை பயன்படுத்தி தோசை,லட்டு, என பல்வேறு பாரம்பரிய உணவு வகைகளும் தயாரித்து சுவைப்பதற்காக வைத்திருந்தனர். மேலும், பழங்களை பயன்படுத்தி பல்வேறு நாகரிக உணவு தயாரித்து பார்வை க்கு வைத்திருந்தை பார்வை யிட்டு ஒவ்வொருவரும் அந்த உணவை தயாரித்த விதம், அதனுடைய சுவை போன்றவற்றை அறிந்து, சுவையாக உணவு தயாரித்த கல்லூரி மாணவ- மாணவிகளை பாராட்டினார்.சிறந்த உணவுகளை தயாரித்த மாணவ- மாணவியருக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்களை தீனா தயாளன் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.பின்னர் அவர் பேசும் போது, மாணவர்கள் கேட்டரிங் துறை என்று மட்டுமல்ல எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் எந்த அளவுக்கு நாம் முயற்சி எடுத்து தேடுதல் கொள்கிறோமோ, அந்த அளவுக்கு வாழ்க்கையில் வெற்றி பெறலாம். என்னதான் கடுமையான உழைப்பை நாம் மேற்கொண்டாலும் அதனுடன் ஸ்மார்ட் ஒர்க்கையும் நாம் பயன்படுத்தினால் நம் உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News