உள்ளூர் செய்திகள்

வீட்டில் இருந்து வெளியே சென்ற டிரைவர் மாயம்

Published On 2022-11-28 09:32 GMT   |   Update On 2022-11-28 09:32 GMT
  • வீட்டில் இருந்து வெளியே சென்ற டிரைவர் மாயமானார்
  • மனைவி புகாரின் பேரில் போலீசார் தேடிவருகின்றனர்

கரூர்:

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அங்கமுத்து (வயது 51) கார் டிரைவர். இவர் கடந்த, 17-ந் தேதி, வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பிறகு மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அவரது மனைவி நாகலட்சுமி (42) பல இடங்களிலும் தேடியும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து கணவரை கண்டுபிடித்து தருமாறு அரவக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News