உள்ளூர் செய்திகள் (District)
சாலையில் தவறி விழுந்த தொழிலாளி பலி
- மது போதையில் நடந்து வந்தார்
- சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
கரூர்:
குளித்தலையை அருகே, நங்கவரம் மேல் தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது 48). கூலி தொழிலாளி. இவர், கடந்த 18ம் தேதி குளித்தலை, பெரியபாலம் அருகே உள்ள சினிமா தியேட்டரில் படம் பார்த்துவிட்டு, குடிபோதையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் மோகன் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மோகன் உயிரிழந்தார். இது குறித்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.