உள்ளூர் செய்திகள்

ஆடுகள் விற்பனை விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2023-03-19 08:01 GMT   |   Update On 2023-03-19 08:01 GMT
  • கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் ஆடு வளர்க்கும் விவசாயிகளிடம் நேரடி வியாபாரம்
  • இடைத்தரகர்கள் இல்லாததால் மகிழ்ச்சி

கிருஷ்ணராயபுரம்,

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகிளிப்பட்டி, புனவாசிப் பட்டி, அந்தரப்பட்டி, கிராமங்களில் விவ சாயிகள் வீடுகளில் ஆடுகள் வளர்த்து வருகின்றனர். இந்த வளர்ப்பு ஆடுகளை வியாபாரிகள் நேரில் வந்து வாங்கி செல்கின்றனர்.இதனால் விவசாயிகள் அலைச்சல் இல்லாமல் ஆடுகள் விற்று வருகின்றனர். தற்போது, 5 கிலோ எடை கொண்ட கிடா ஆடு ஒன்று, 4,000 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டது. மேலும் கிராமங்களில் நல்ல தரத்துடன் ஆடுகள் கிடைப்பதால் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இதன் மூலம் விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் கிடைத்து வருகிறது.




Tags:    

Similar News