- தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை சார்பில் நடைபெற்றது
- அனைவரும் உறுதி மொழி ஏற்பு
கரூர்,
கரூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை சார்பில் தீ தொண்டு நாள் வார விழாவையொட்டி தீயணைப்பு வீரர்களின் வீர தியாகத்தை நினைவூட்டும் வகையில் ஆலையின் கால அலுவலகத்திற்கு முன்பாக நடந்த உறுதிமொழி ஏற்கும் விழா நடைபெற்றது. இதில் தலைமை விழிப்புணர்வு அதிகாரி பண்டி கங்காதர் (ஐ.பி.எஸ்.) மற்றும் செயல் இயக்குனர் (இயக்கம்) கிருஷ்ணன் கலந்துக் கொண்டு சிறப்புரை வழங்கினார்கள்.அதைத்தொடர்ந்து, முதன்மை பொது மேலாளர் (உற்பத்தி-திட்டம் ஒருங்கிணைப்பு) வரதராஜன், தீ தொண்டு நாள் செய்தியை வழங்கி உறுதிமொழியை வாசிக்க, அவரை தொடர்ந்து காகித ஆலையில் பணிபுரியும் அதிகாரிகள், தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் அனைவரும் உறுதிமொழியை ஏற்றனர்.இந்த விழாவில் பொது மேலாளர் (மனித வளம்) கலைச்செல்வன் மற்றும் துணை பொது மேலாளர் (பாதுகாப்புத்துறை) ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு தீ தொண்டு நாள் குறித்து சிறப்புரையாற்றினர். இதற்கான ஏற்பாடுகளை உதவி அலுவலர் (பாதுகாப்பு) செந்தில்குமார் மற்றும் பாதுகாப்புத் துறையினர் செய்திருந்தனர்.