உள்ளூர் செய்திகள் (District)

டீசல் திருடிய லாரி டிரைவர் கைது

Published On 2023-05-23 08:51 GMT   |   Update On 2023-05-23 08:51 GMT
  • டீசல் திருடிய லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
  • போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் :

கரூர் சணப்பிரட்டி அருகே தனியார் லாரி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தநிறுவனத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வந்த புலியூர் ஆசாரியர் காலனியை சேர்ந்த ரவிக்குமார் (வயது 45). நிறுவனத்தில் இருந்து 25 லிட்டர் டீசலை திருடி உள்ளார். இதுகுறித்து நிறுவனத்தின் மேலாளர் பாலசுப்பிரமணி பசுபதிபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ரவிக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News