உள்ளூர் செய்திகள்
- அரசு பள்ளியில் அறிவியல் திருவிழா நடைபெற்றது
- வானவில் மன்றம் சார்பில் நடைபெற்றது
கரூர்,
கரூர் மாவட்டம், பள்ளி கல்வித்துறையின், அறிவியல் இயக்கம் வானவில் மன்றம் சார்பில் கிருஷ்ணராயபுரம் பகவதி அம்மன் கோவில் அரசு நடுநிலைப் பள்ளியில் அறிவியல் திருவிழா நடைபெற்றது. வட்டார தொடக்கக்கல்வி அலுவலர்கள் செந்தில்குமாரி, மனோகரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சி எங்கும் அறிவியல், யாவும் கணிதம் என்ற தலைப்பில் தொடர்ந்து 15 நாள் நடைபெற உள்ளது. இதில் 5 வயது முதல் 13 வயது வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு அறிவியலுக்கும் கணிதத்திற்கும் உள்ள தொடர்பினை குறித்து விளக்கப்படுகிறது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மல்லிகா, சுமதி , ஆசிரியர் பயிற்றுனர் கவிதா, செந்தாமரைச்செல்வி, பேரூராட்சி கவுன்சிலர் ரேகா மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.