உள்ளூர் செய்திகள் (District)

புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம்

Published On 2023-04-15 08:37 GMT   |   Update On 2023-04-15 08:37 GMT
  • புகழூர் காகித ஆலை சார்பில் நடைபெற்றது
  • பொதுமக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது

கரூர்,

புகழூர் காகித ஆலை சார்பில் புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி பாலசுப் ரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இள நீர், சந்தனம், மஞ்சள் உள் பட18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலசுப்பிரமணியசுவாமி பக்தர்களுக்கு காட்சிய ளித்தார்.இதில், தமிழ்நாடு காகித ஆலை நிறுவன தலைவரும், இயக்குனருமான சாய்குமார், கோவில் திருப்பணிக் குழு தலைவரும், புகழூர் நகர்மன்ற தலை வருமான நொய்யல் சேகர் என்கிற குணசேகரன், காகித ஆலை செயல் இயக்குனர் கிருஷ்ணன், முதன்மை பொது மேலா ளர் (வன தோட்டம் மற்றும் ஆராய்ச்சி) சீனிவாசன், முதன்மை பொது மேலா ளர் (திட்டம் மற்றும் திட்டம் ஒருங்கி ணைப்பு) வரதராஜன். பொது மேலா ளர் (மனிதவளம்) கலைச்செல்வன், கோவில் திருப்பணிக்குழு துணை தலைவர் அண்ணாவேலு, காகித அலுவலர்கள், பல்வேறு துறை இயக் குனர்கள். கோவில் திருப்ப ணிக்குழு வினர், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் சமணர் படுகைகளை அவர்கள் பார்வை யிட்டனர். மதியம் பொது மக்க ளுக்கு அன்னதானம் வழங்க ப்பட்டது.

Tags:    

Similar News