பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி
- பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது.
- தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு
கரூர்:
தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18-ந்தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மாவட்ட அளவில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இதனையொட்டி கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கிடையே கட்டுரை, பேச்சுப் போட்டிகள் கரூர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது.
முதன்மைக் கல்வி அலுவலரால் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொண்டனர். தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் வே.ஜோதி போட்டிகளை தொடங்கி வைத்தார். இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.10,000, 2ம் பரிசு ரூ.7,000, 3ம் பரிசு ரூ.5000 வழங்கப்பட உள்ளது. நடுவர்களாக முதுகலை தமிழ் ஆசிரியர்கள் மு.சசிகலா, ரா.தேவி, த.தேன்மொழி, தமிழ் ஆசிரியர்கள் க.விஜயராணி, பி.சரவணக்குமார், ம.மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.