உள்ளூர் செய்திகள் (District)

ஸ்கூட்டர் திருட்டு

Published On 2023-03-25 08:46 GMT   |   Update On 2023-03-25 08:46 GMT
  • குளிக்க சென்றவரின் ஸ்கூட்டர் திருட்டு
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

கரூர்,

குளித்தலை அருகே, கல்லடை பஞ்., இடையப்பட்டியை சேர்ந்தவர் மூர்த்தி, (வயது 35). இவர் குளித்தலை, கடம்பர்கோவில் காவிரி ஆற்றில் பிள்ளையார் கோவில் அருகே தன், 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு, ஆற்றுக்குள் சென்று குளித்துவிட்டு, திரும்பி வந்து பார்த்தபோது, ஸ்கூட்டரை காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்த வித தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, குளித்தலை போலீசில் மூர்த்தி கொடுத்த புகாரின் படி, போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News