உள்ளூர் செய்திகள் (District)
மொபைல் டவரில் இருந்து விழுந்த வாலிபர் பலி
- எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார்
- போலீசார் விசாரணை
கரூர்,
உத்தர பிரதேச மாநிலம், மிர்சாபூர் பகுதியை சேர்ந்தவர் ஆஷிக் அன்சாரி(24). இவர், கரூரில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் அரவக்குறிச்சி அருகே ஆண்டிப் பட்டி கோட்டையில் தனியார் மொபைல் நிறுவனத்தின் டவரில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்து படுகாயமடைந்தார். பின்னர் கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆஷிக் அன்சாரி அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.