உள்ளூர் செய்திகள் (District)

முதியவர் திடீரென சாவு

Published On 2023-02-09 07:47 GMT   |   Update On 2023-02-09 07:47 GMT
  • முதியவர் திடீரென பரிதாபமாக இறந்தார்.
  • இந்த சம்பவம் குறித்து கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர்:

கரூர் சின்ன ஆண்டாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் திருமலைசாமி (வயது 72). இவர் தனது வீட்டில் மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கிருந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News