உள்ளூர் செய்திகள் (District)
போக்குவரத்துக்கு இடையூறு செய்தவர் கைது
- பொதுமக்களை ஆபாச வார்த்தையால் அர்ச்சனை செய்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியவர் கைது
- போலீசார் எச்சரித்தும் கேட்காததால் கைது செய்யப்பட்டார்
கரூர்,
குளித்தலை,வெள்ளப்பட்டி, சின்ன தேவன்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (45). இவர் தோகைமலை பஸ் ஸ்டாண்டில் நின்றுகொண்டு, ஆபாச வார்த்தைகளில் பேசி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தினார். தோகைமலை போலீசார் எச்சரிக்கை விடுத்தும், அவர் கேட்கவில்லை. இதையடுத்து போலீசார், கோவிந்தராஜை கைது செய்தனர்.