உள்ளூர் செய்திகள் (District)
- வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் துணிகரம்
- போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
கரூர்,
கரூர் அருகே, வீட்டின் கதவை உடைத்து, 10 பவுன் நகையை திருடி சென்றவர்கள் குறித்து போலீசார் விசா ணை நடத்தி வருகின்றனர்.கரூர், காந்தி கிராமம் பகுதியை சேர்ந்தவர் நகுல்சாமி (வயது 66) இவர் கடந்த, 1ம் தேதி, வீட்டை பூட்டி விட்டு, குடும்பத் துடன், திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். பிறகு, இரவு, வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், பீரோவில் வைக்கப்பட்டிருந்த, 10 பவுன் நகைகளை காணவில்லை. இது குறித்து, நகுல்சாமி கொடுத்த புகாரின்படி, தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.